சென்னை: தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 5 லட்சத்து 61 ஆயிரம் குழந்தைகளுக்கு 43 ஆயிரத்து 51 இடங்களில்போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடக்கிறது. 5 வயதுக்குட்பட்ட 57 லட்சத்து 61 ஆயிரம் குழந்தைகளை இலக்கு வைத்து இந்த முகாம்கள் நடக்கிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதால்தான் பல நாடுகளில் இன்னும் இந்த நோய் ஒழிக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் கட்டாயம் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். யாரும் கவனக்குறைவாக இருக்க கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மாநில எல்லைகளிலும் போலியோ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு, அடுத்த 3 நாட்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதர உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அந்தந்த பகுதிகளில் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் சொட்டு மருந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். …
பெற்றோர்களே மறக்காதீர்கள்… இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: 43,051 இடங்களில் நடக்கிறது
previous post