பெரு நாட்டில் கோமாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமானோர் நீண்ட காலணிகள், வண்ண பூசிய முகங்கள், விக்குகள் அணிந்து பேரணி நடத்தினர். குழந்தைகளுடன் பேரணியை காண திரண்ட உள்ளூர் மக்கள் உற்சாக ஆரவாரம் எழுப்பி கோமாளிகளை வரவேற்றனர். மக்களை சிரிக்க வைப்பது தான் தங்கள் கலை என்று கூறும் இந்த கோமாளிகள் பணிச்சுமை போன்ற பல்வேறு பிரச்சனைகளால் ஏற்படும் அழுத்தங்களை நீக்குவதாக கூறுகின்றனர்.