பெருந்தோட்டத்தில் புதிய பேருந்து நிழலகம் திறப்பு

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டத்தில் புதிய பேருந்து நிழலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், சரவணன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் உஷாநந்தினி பிரபாகரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மோகனா ஜெய்சங்கர் வரவேற்றார். சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் புதிய பேருந்து நிழற்கூடையை திறந்து வைத்து பேசினார். விழாவில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பஞ்சுகுமார், பிரபாகரன் மாவட்ட கவுன்சிலர்கள் ஆனந்தன் விஜேஸ்வரன், ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை