பெருநகர் கிராமத்தில் இந்தியன் வங்கியில் தீவிபத்து

 

உத்திரமேரூர், செப்.30: உத்திரமேரூர் அருகே பெருநகர் கிராமத்தில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வங்கியில் உள்ள ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு தீ எரிய துவங்கியது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர், உத்திரமேரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததின்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பெருநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் மின்சாதன பொருட்கள் மட்டும் எரிந்து நாசமானது. மேலும், வங்கி கோப்புகள் உள்ளிட்ட அனைத்தும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வைக்கப்பட்டது. பெருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி