பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய எஸ்பி நியமனம்

பெரம்பலூர், ஆக. 9: பெரம்பலூர் மாவட்ட புதிய எஸ்பியாக ஆதர்ஷ் பச்சேரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக பதவி வகித்து வருபவர் ஷ்யாமளாதேவி. இந்நிலையில் திருநெல்வேலி (கிழக்கு) மாநகர துணை கமிஷ்ன ராகப் பணிபுரிந்து வந்த ஆதர்ஷ் பச்சேரா, பெரம்ப லூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி திருச்சி மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பியாக பணிமாறுதல் செய்யப் பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மைசெயலாளர் நீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி