பெரம்பலூர் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் பரிதாப பலி

 

பாடாலூர், செப்.24: ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் மனைவி இந்திராகாந்தி (47). குடும்ப பிரச்சனையால் நேற்று முன்தினம் மாலை திடீரென தனது உடலில் டீசல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் வேதனை தாங்க முடியாத இந்திராகாந்தி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு