பெரம்பலூரில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

பெரம்பலூர்: பெரம்பலூரில் வாலிபர் தூக்கி ட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம், நியூ காலனி, பள்ளிவாசல் தெருவில், சுப்பிரமணி என்பவரது வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு தங்கி இருந்த, கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகு தியை சேர்ந்த ராஜா(38), என்கிற ஏசி மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செ ய்து கொண்டார். வீடு பூட்டப்பட்டிருந்த நிலை யில் துர்நாற்றம் வீசியதை அறிந்து, அப்பகுதி பொது மக்கள் அளித்த தகவலின் பேரில், பெரம்பலூர் போலீ சார் சம்பவ இடத்திற்குச் சென்று அழுகிய நிலை யில் இருந்த ராஜாவின் சட லத்தை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக பெரம்ப லூர் அரசு மருத்துவ மனை க்கு அனுப்பி வைத்து வழ க்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராஜாவி ற்கும் அவரது மனைவிக் கும் இடையே ஏற்பட்ட கரு த்து வேறுபாடு காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற் ற நிலையில், மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளான ரா ஜா மனமுடைந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் னால் தூக்கிட்டு தற்கொ லை செய்து கொண்டிருக் கலாம் என தெரிய வந்திரு க்கிறது.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி