பெண் தற்கொலை முயற்சி

சிவகங்கை, ஆக. 10: மானாமதுரை சாஸ்தா நகரை சேர்ந்தவர் தனலெட்சுமி. இவர் கணவர் இறந்த நிலையில், 7 வயது மகனுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. நேற்று, தனலெட்சுமி மகனுடன் சிவகங்கை தெப்பக்குளத்தில் இறங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து வந்த சிவகங்கை நகர் போலீசார் இருவரையும் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்