பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

கிருஷ்ணகிரி, செப்.8: கிருஷ்ணகிரி அடுத்த இட்டிக்கல் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி மதுமிதா(21). இவர் கடந்த 6ம் தேதி மாலை, வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த பாலகுறி கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ்(36) என்பவர், மதுமிதாவிடம் உனது கணவர் ₹10ஆயிரம் கடன் வாங்கினார். அந்த பணத்தை இதுவரை கொடுக்கவில்லை. அந்த பணத்தை தரவேண்டும் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மாதேஷ், மதுமிதாவை தாக்கினார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாதேசை கைது செய்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்