ஓசூர்,ஜூன் 21: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலை தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரீனா (43). இவர் கடந்த 18ம் தேதி இரவு, மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர், ரீனா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரீனா, அலறி கூச்சலிட்டார். அதற்குள் நகையை பறித்த நபர்கள், அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இது குறித்து ரீனா, ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். இதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, வருகின்றனர்.