பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வழிப்பறி ஆசாமிகள்: சமூக வலைதளங்களில் பரவும் சிசிடிவி காட்சி

பூந்தமல்லி: பூந்தமல்லியில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற ஆசாமிகளை போலீசார் தேடுகின்றனர். பூந்தமல்லி கந்தசாமி நகரை சேர்ந்தவர் சரண்யா(29), நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அங்கும், இங்கும் நோட்டமிட்டபடி சரண்யாவின் அருகில் சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச்செயினை பறிக்க முயன்றனர். அவர்களுடன் சரண்யா போராடினார். செயினை பறிக்க முடியாததால் அவரை கீழே தள்ளிவிட்டு 2 பேரும் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறித்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. …

Related posts

தாய்லாந்தில் இருந்து பச்சோந்திகளை கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி