பெட்ரோல் டேங்க் மீது அமரவைத்து பள்ளி மாணவியை கட்டியணைத்து பைக்கில் காதல் விளையாட்டு: வாலிபருக்கு செம கவனிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள உருக்காலை சாலையில் நேற்று முன்தினம் ஒரு காதல் ஜோடி பைக்கில் ெசல்வதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் முகம்சுளித்தனர். காரணம், பைக் ஓட்டிய வாலிபர் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது பள்ளி மாணவி ஒருவரை அமர வைத்து தன்னை கட்டிப்பிடித்தபடி பைக் ஓட்டினார்.  அப்போது, அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் காதல் ஜோடியின் அந்த பைக் பயண காட்சியை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார்.அந்த காட்சி வைரலானது. இதையடுத்து விசாகப்பட்டினம் போலீசார் அந்த காதல் ஜோடியை தேடினர். பைக் பதிவு எண்ணை வைத்து விசாரித்ததில் அந்த வாலிபர் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த வாலிபர் என்பதும், அவருடன் சென்றவர் 10ம் வகுப்பு மாணவி என்பதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பெற்றோருடன் போலீஸ் நிலையத்திற்கு வரும்படி அழைத்தனர். அவர்களிடம் இதுபோன்று சாகச பயணம் செய்யக்கூடாது, சற்று நிலை தடுமாறி இருந்தாலும் இருவரின் உயிருக்கும் ஆபத்தாக முடிந்திருக்கும் என அறிவுரை கூறினர். அந்த மாணவியிடம் படிக்கும் வயதில் கல்வி மீது மட்டுமே கவனம் செலுத்தவேண்டும், காதல் வயப்படுவது தவறு என கூறினர். மேலும் அந்த வாலிபரை தனியாக அழைத்து போலீசார் தங்கள் பாணியில் ‘கவனித்து’ அனுப்பி வைத்தனர். …

Related posts

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்

இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஊர், ஊராக அழைத்துச் சென்று சித்ரவதை: ஜம்முவில் வாலிபர் கைது