பூமிநாதர் கோயிலில் மண்டல இணை ஆணையர் ஆய்வு

சமயபுரம், ஆக.4: மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பிரகாஷ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது இதில் வழிபாடு முறைகள், கடைகள், பல்வேறு இடங்களில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலங்களையும் ஆய்வு செய்தார். மேலும் மழைநீர் வடிகால் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இக்கோயிலில் அறநிலையத்துறை சார்பில் புனரமைப்பு பணிக்காக ரூ.68 லட்சம் நிதி தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாகவும், கோயில் புனரமைப்பு பணிகள், மழைநீர் வடிகால், சுற்றுச்சுவர் மராமத்து பணிகள், வர்ணம் பூசுதல் பல்வேறு பராமரிப்பு பணிகள் விரைவில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். ஆய்வின்போது திருப்பைஞ்சீலி கோயில் செயல் அலுவலர் மனோகரன், ஆய்வாளர் சீனிவாசன், மண்ணச்சநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி, துப்புரவு ஆய்வாளர் உடனிருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை