துபாய்: ஐக்கிய அரபு அமீரக நாட்டின் வர்த்தக நகரான துபாய் தேரா பகுதியில்அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இக்குடியிருப்பில் இந்தியர்கள் உள்ளிட்ட பலர் வசித்து வருகிறார்கள். இங்கு சிலர் வீட்டு விலங்கான பூனைகளை வளர்க்கின்றனர் சம்பவத்தன்று குடியிருப்பின் 3-வது மாடியின் பால்கனி பகுதியில் ஒரு பூனை ஒன்று கிழே விழும் சூழலில் தொங்கி கொண்டிருந்தது. பூனையை காப்பாற்றும் வகையில் இதனை கண்ட அப்பகுதியிலிருந்த 3 பேரில் ஒருவர் அட்டைபெட்டியை பிடிக்க மற்ற இருவர் தங்களிடம் இருந்த துணி ஒன்றை வலை போன்று விரித்க 3வது மாடியிலிருந்து கர்ப்பிணி பூனை தவறி சரியாக துணியில் விழுந்ததால காப்பற்றப்பட்டது. இச்சம்பத்தை வீடியோவாக எடுத்து ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வைரலாக பரவியது. இந்த வைரல் வீடியோ அமீரக துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் கவனத்திற்கு சென்றது.இதனை பாராட்டி அவர் தனது வலைதளத்திலும் பதிவிட்டு அவர்கள் குறித்த விபரங்களையும் கேட்டிருந்தார். இதனையடுத்து அவர்கள் இந்திய ஓட்டுநர் நாசர்,மொரக்கோவை சேர்ந்த வாட்ச்மேன் அஷ்ரப், பாகிஸ்தானின் அதிப் மெஹ்மூத், வீடியோவை வெளியிட்டவர் இந்தியாவை சேர்ந்த ரசீத் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து துபாய் ஆட்சியாளர் சார்பில் அவர்களின் மனிதாபிமானத்தை பாராட்டி நான்கு நபர்களுக்கும் இந்திய மதிப்பில் தலா ரூ 10 லட்சம் என 40 லட்சம் வழங்கப்பட்டது. இது குறித்து நான்கு பேரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்….
பூனையிடம் மனிதாபிமானம்: ரூ.40 லட்சம் பரிசு
previous post