பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

 

பூந்தமல்லி:பூந்தமல்லி அரசு மருத்துவமனையில், வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பூந்தமல்லி டிரங்க் சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. 24 மணி நேரமும் இயங்கி வரும் இந்த மருத்துவமனை வளாகத்தில் பின்புறமுள்ள ஷெட்டில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க காக்கி நிற சட்டை அணிந்திருந்த வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே, பணியில் இருந்த மருத்துவர்கள் வாலிபரை மீட்டு பரிசோதனை செய்ததில் அவர் இறந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார், சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், நேற்று அதிகாலை மருத்துவமனைக்கு வந்த இவர், சிறிது நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? எதற்காக தற்கொலை செய்தார்? நோய் குணமாகாததால் தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை