சேலம், ஏப்.6: சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய தொகுதிகளில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் கட்சியின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பு, புதிய உறுப்பினர் சேர்த்தல், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பாக நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி தலைமையில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு நெசவாளர் அணி மாநில செயலாளர் பரணி மணி, சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்கு வர்த்தக அணி இணை செயலாளர் முருகவேல், மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.
அதன்படி, நாளை (7ம்தேதி) காலை 9 மணி முதல் இடங்கணசாலை நகர், தாரமங்கலம் மேற்கு ஒன்றியம் 1, தாரமங்கலம் மேற்கு ஒன்றியம் 2, தாரமங்கலம் நகரம், சங்ககரி பேரூர், தேவூர் பேரூர், அரசிராமணி பேரூருக்கும், மறுநாள்(8ம்தேதி) காலை 9 மணி முதல் சங்ககிரி ஒன்றியம் 1, 2, 3, மகுடஞ்சாவடி ஒன்றியம் 1, 2, ஜலகண்டாபுரம் பேரூர், வனவாசி பேரூர், நங்கவள்ளி பேரூர் ஆகியவற்றுக்கும் நடக்கிறது. 9ம்தேதி(ஞாயிறு) காலை 9 மணிமுதல் நங்கவள்ளி ஒன்றியம் 1, 2, 3, எடப்பாடி ஒன்றியம் 1, 2, பூலாம்பட்டி பேரூர், எடப்பாடி ஒன்றியம் 3, ஆகிய இடங்களுக்கு நடக்கிறது. 10ம்தேதி(திங்கள்) காலை 9 மணி முதல் கொங்கணாபுரம் ஒன்றியம் 1, கொங்கணாபுரம் பேரூர், கொங்கணாபுரம் ஒன்றியம் 2, 3, மேட்டூர் நகரம் 1, 2, பி.என்.பட்டி பேரூர், வீரக்கல்புதூர் பேரூர் ஆகிய இடங்களுக்கு நடக்கிறது.
11ம்தேதி(செவ்வாய்) காலை 9 மணி முதல் கொளத்தூர் ஒன்றியம் 1, கொளத்தூர் பேரூர், கொளத்தூர் ஒன்றியம் 2, 3, மேச்சேரி ஒன்றியம் 1, 2, மேச்சேரி பேரூர், மேச்சேரி ஒன்றியம் 3, 4, ஆகிய இடங்களுக்கு நடக்கிறது. 12ம்தேதி(புதன்) பகல்2 மணி முதல் எடப்பாடி நகரம் 1, 2 ஆகிய இடங்களுக்கு நடக்கிறது. இக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இந்நாள், முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும், தவறாமல் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.