பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி சடலம் மீட்பு

சேலம், ஜூலை4: சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரிரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(75). இவரது மகள் சென்னையில் வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த ராஜேஸ்வரி கூலி வேலைக்கு செல்வார். கடந்த 2 நாட்களாக வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பின்னர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, மூதாட்டி ராஜேஸ்வரி அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது

குன்றத்து மலை மீது சோலார் மின் விளக்கு

மேலூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்