புளியங்குடி, வீரசிகாமணி பகுதியில் இன்று மின்தடை

புளியங்குடி,செப்.2: புளியங்குடி, வீரசிகாமணி துணை மின்நிலையங்களில் மாதந்திர பராமரிப்பு காரணமாக இன்று (செப்.2) மின் விநியோகம் இருக்காது என்று கடையநல்லூர் செயற்பொறியாளர் ஆதிலட்சுமி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: புளியங்குடி துணை மின் நிலையங்களில் உள்ள கிராமங்களான புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிப்பட்டி, சங்கனாபேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், திரிகூடபுரம், சொக்கம்பட்டி, மேலபுளியங்குடி, முள்ளிகுளம், தலைவன் கோட்டை, நகரம், மலையடிக்குறிச்சி, வெள்ளக்கவுன்டன்பட்டி பகுதியிலும், வீரசிகாமணி துணை மின் நிலையங்களில் உள்ள கிராமங்களான வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாசலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோவில் சந்தை, வெண்டிலிங்கபுரம், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேந்தமரம், நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இன்று (செப்.2) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. எனவே மேற்படி கிராமங்களில் மின் கம்பிகளில் தொடும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை