புறக்காவல் நிலையம் திறக்க வேண்டும்: கருவக்குடி பொதுமக்கள் கோரிக்கை

காரியாபட்டி: நரிக்குடி அருகே கருவக்குடி கிராமத்தில் உள்ள புதிய புறக்காவல் நிலையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நரிக்குடி அருகே கருவக்குடி கிராமத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தின் எல்லை பகுதியாகவும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் செல்லும் முக்கிய சாலையில் உள்ளது. இக்கிராமத்திற்கு பாதுகாப்பின் அவசியம் குறித்தும் திருட்டு கொள்ளை சம்பவங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் கிராம பொதுமக்களின் முயற்சியால் புறக்காவல் நிலையம் கட்டப்பட்டு அ.முக்குளம் காவல் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.ஆனால் புறக்காவல் நிலையம் இன்னும் திறக்கப்படாமல் பயன்பாட்டுக்கு வராமலும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு வீட்டை உடைத்து பொருள்கள் திருடப்பட்ட நிலையும், தொடர்ந்து திருட்டு நடைபெற்றும் வருகிறது. எனவே மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கருவக்குடி பொதுமக்களின் நலன் கருதி புதிய புறக்காவல் நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!