புதுச்சேரி, செப். 24: புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வாகனத்தில் வந்த நபரை போலீசார் பிடித்து, வாகனத்தின் ஆவணங்களை கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், முத்துப்பிள்ளைபாளையம் பகுதியை சேர்ந்த தேவா என்பதும், அப்பகுதியில் உள்ள அண்ணா வீதியில் இருசக்கர வாகனத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் தேவா மீது வழக்குபதிந்து, கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.