புதுமைப்பெண் திட்டம் விழிப்புணர்வு முகாம்

 

சிவகாசி, ஜூலை 25: சிவகாசியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பெண்களுக்கான வாழ்வியல், பெண்கள் நலன், பெண்களுக்கான தலைமைப்பண்புகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு அரசு அலுவலர்கள் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) தங்கலட்சுமி, கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’