புதுச்சேரியில் மின்துறை தனியார்மயம் கைவிடக்கோரி மின் ஊழியர்கள் ஸ்டிரைக்

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி  மின்துறை ஊழியர்கள் 2022 பிப்ரவரியில் 2 நாள் வேலை நிறுத்தம்  மேற்கொண்டனர். அப்போது முதல்வர், அனைவரையும்  பாதிக்காத வகையில் நல்லதொரு முடிவு எடுப்பதாக அளித்த உறுதிமொழியை ஏற்று  போராட்டத்தை தள்ளி வைத்தனர். ஆனால் ஒன்றிய அரசின் நிதியை  பெறுவதற்காக புதுச்சேரி அரசு மின்துறையை தனியார் மயப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக புகார் எழுந்தது. புதுச்சேரி  முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சரின் தவறான நடவடிக்கைக்கு கண்டனம்  தெரிவிக்கும் வகையில் மின்துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உப்பளம் மின்துறை தலைமை அலுவலகத்தில் பணிகளை புறக்கணித்து  திரண்ட 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தரையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது நியாயமான கோரிக்கை நிறைவேறும்வரை  போராட்டத்தை தொடரப்போவதாக எச்சரித்தனர். …

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி