புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரியில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் நடைபெறும். 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாளும், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த நாளும் என சுழற்சி முறையில் அரை நாள் மட்டும் பள்ளிகள் இயங்கும். அதேபோல், அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். 26ம் தேதி மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார்….