புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய உறவினருக்கு இறக்கும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரில் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபருக்கு இறக்கும் வரை ஆயுள், ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. …