புதுக்கோட்டையில் இன்று நடக்கிறது சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு கூட்டம்

புதுக்கோட்டை, மார்ச்4: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற்சாலை பிரச்னைகளுக்கு தீர்வு காண ”சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு கூட்டம் இன்று நடக்கிறது. தமிழக அரசின், சிப்காட் நிறுவனத்தின் தொழில் பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண. \”சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதையொட்டி இன்று (4ம் தேதி) புதுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள சிப்காட் திட்ட அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் \”சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு\” கூட்டம் நடைப்பெறவுள்ளது. இக்கூட்டம் சிப்காட் உதவி பொது மேலாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் சிப்காட் தொழில் முனைவோர்கள், நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தங்கள் பிரச்னைகளை தெரிவித்து தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்