புதுக்கடை அருகே பைக் மோதி மூதாட்டி பலி

புதுக்கடை, அக்12: புதுக்கடை அருகே பைங்குளம் கணக்குபிள்ளைவிளையை சேர்ந்தவர் தங்கப்பன். அவரது மனைவி பத்ரகாளி (80). நேற்றுமுன்தினம் காலை கடைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தேங்காபட்டணம் – புதுக்கடை சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வேகமாக வந்த ஒரு பைக் மூதாட்டி பத்ரகாளியை மோதி தள்ளியது. இதில் மூதாட்டிக்கு தலை உட்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, வெள்ளையம்பலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் பைக்கால் இடித்து விபத்து ஏற்படுத்திய தேங்காபட்டணம் பனங்கால்முக்கு பகுதியை சேர்ந்த மனோகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்