புதிய ரேஷன்கடை திறப்பு: எம்பி திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாயவிலை கட்டிட திறப்பு நடந்தது. காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து உத்திரமேரூர்  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 18.8 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன்கடை கட்டிடம் மற்றும் நவீன பஸ் நிறுத்த நிழற்குடை ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு நேற்று திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏவுமான க.சுந்தர் தலைமை தாங்கினார். மாகறல் ஊராட்சியில் 13.8 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன்கடை, ஆற்பாக்கம் ஊராட்சியில் 5 லட்சத்தில் நவீன பஸ் நிழற்குடை ஆகியவை எம்பி ஜி.செல்வம் திறந்து வைத்தார். ஒன்றிய திமுக செயலாளர் க.குமணன், நிர்வாகிகள் வீரராகவன், பரசுராமன், வக்கீல் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்