புதிய மின்மாற்றி திறப்பு

அரூர்: மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சி தாசரஅள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தழுத்த மின்சப்ளையால் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து, ஆர்.கோபிநாதம்பட்டி துணை மின் நிலையத்தில் புதியதாக வழித்தடம் அமைத்து, ₹10.42 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 11 கே.வி டிரான்ஸ்பார்மரை அரூர் சம்பத்குமார் எம்எல்ஏ பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் யசோதா மதிவாணன், ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மார்கண்டன், துணை தலைவர் சம்பத், மின்வாரிய செயற்பொறியாளர் ரவி, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் சக்திமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்