புதிய திட்டங்களை செயல்படுத்துவார்: கரிகாலனை ஆதரித்து பிரசாரம்

தாம்பரம்: தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ம.கரிகாலனுக்கு ஆதரவாக கிழக்கு தாம்பரம், ரயில்வே கிரவுண்ட் மற்றும் கிழக்கு தாம்பரம் காந்தி பூங்காவில் நடைபயிற்சி  சென்றவர்களிடம், அமமுக செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன் தலைமையில், நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தேமுதிக நகர செயலாளர் செழியன் மற்றும் நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். அப்போது, அவர்கள் வேட்பாளர் கரிகாலன் தாம்பரம் நகரமன்ற தலைவராக இருந்தபோது, தாம்பரம் நகராட்சிக்கு செய்த பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளையும்  எடுத்துக்கூறி குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.தாம்பரம் நகர மன்ற தலைவராக கரிகாலன் இருந்தபோதுதான் கிழக்கு தாம்பரம், காந்தி பூங்கா மற்றும் மேற்கு தாம்பரத்தில் உள்ள முத்துரங்கம் பூங்கா சீரமைக்கப்பட்டது. தாம்பரத்தில் உள்ள அம்பேத்கர் திருமண மண்டபத்தை சீரமைத்து  ஏழைகளும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் குறைந்த கட்டணம் நிர்ணயித்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தவர் கரிகாலன். இந்த தொகுதியில், மேலும் பல புதிய திட்டங்களை செயல்படுத்த குக்கர் சின்னத்திற்கு வாக்களித்து, அவரை  வெற்றிபெறச் செய்யவேண்டும் என கேட்டுக் கொண்டனர். அமமுக நிர்வாகி கோரல் வெங்கடேசன் மற்றும் தேமுதிக நிர்வாகி அலெக்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். …

Related posts

சொல்லிட்டாங்க…

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்