கடத்தூர், ஜூலை 31: கடத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(60). இவரது பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கடத்தூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ முகில்ராஜ் அவரை கைது செய்து, கடையில் இருந்த 15 பாக்கெட் ஹான்ஸை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.