புகையிலை விற்ற இருவர் கைது

மானூர், மார்ச் 14: மானூர் எஸ்ஐ ரபினாமரியம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலப்பிள்ளையார்குளத்திலுள்ள அரசு கல்லூரி அருகே கயத்தாரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் சின்னத்துரை(30) என்பவர் புகையிலை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதேபோல் வடக்கு செழியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே குப்பனாபுரத்தைச் சேர்ந்த உச்சிமகாளி மகன் முத்துகிருஸ்ணன்(44) என்பவர் புகையிலை விற்றுக் கொண்டிருந்தார். இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 1000 ரூபாய் மதிப்புள்ள புகையிலையை பறிமுதல் செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை