புகையிலை பொருள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம்

பாலக்கோடு, ஜன.6: காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மாரண்டஅள்ளி போலீசார், மாரண்டஅள்ளி பஸ் நிலையம் பகுதியில் உள்ள டீக்கடை, பீடா கடை, நான்கு ரோடு பகுதியில் ஒரு பீடா கடை, வெள்ளிச்சந்தை ரோடு, பஞ்சப்பள்ளி மற்றும் காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் உள்ள மளிகை கடைகள், பெட்டிகளில் சோதனை நடத்தினர். இங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், 5 கடைகளுக்கும் தலா ₹5 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், தொடர்ந்து கடை இயங்க தடை விதித்து நோட்டீஸ் வழங்கினர். மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க கூடாது என எச்சரித்து சென்றனர்.

Related posts

திசையன்விளை மனோ கல்லூரியில் இன்று ஆதார் முகாம்

ஆதித்தமிழர் பேரவை தென்காசியில் ஆர்ப்பாட்டம்

நெல்லை அருகே டிராக்டரில் சரள் மண் கடத்திய டிரைவர் கைது