புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் ஆலயத்தில் குண்டம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கோயிலில் கடந்த 14ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. உச்ச நிகழ்வான குண்டம் விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவும் அக்னி குண்டத்தில் இறங்கி வழிபாடு செய்தார். விழாவையொட்டி பண்ணாரி அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.