பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்து கொண்ட தொழிலாளி

கோவை, ஏப்.9: கோவை ரத்தினபுரி அருகே உள்ள பூந்தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் (45). வெல்டர். இவர், மது போதையில் சங்கனூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாகராஜ் அங்கே கிடந்த பீர் பாட்டிலை உடைத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை தடுக்க முயன்றனர். அதற்குள் நாகராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். ஆம்புலன்ஸ் மூலமாக இவர் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நாகராஜ், முருகன் கோயிலுக்கு மாலை அணிந்திருந்தார். இவரது மனைவி வெளியூர் சென்ற நிலையில் இவர் மாலையை கழற்றி விட்டு மது குடித்ததாக தெரிகிறது. செல்போனில் யாரிடமோ பேசிய இவர், கோபத்தில் கழுத்தை அறுத்து கொண்டதாக தெரிகிறது. துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை