பீகார் வாலிபரிடம் செல்போன் பறித்த பிளஸ்2 மாணவர் உள்பட 3 இளஞ்சிறார்கள் கைது

தூத்துக்குடி, செப். 6:தூத்துக்குடியில் பீகார் வாலிபரிடம் செல்போன் பறித்த பிளஸ்2 மாணவர் உட்பட 3 இளஞ்சிறார்களை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராதாலால் மகன் ராஜ்குமார் (20). இவர், தூத்துக்குடி தனசேகரன் நகரில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இங்குள்ள பூங்கா அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர், அவரை வழிமறித்து கம்பால் தாக்கி அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து இதே பகுதியை சேர்ந்த பிளஸ்2 மாணவர் உள்பட 3 இளஞ்சிறார்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை