பீகார் மாநில வாலிபர் தற்கொலை

திருப்பூர், செப்.27: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணகுமார் (23). இவர், திருப்பூர் தண்ணீர் பந்தல் காலனி அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறி தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தங்கியிருந்த அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனை அறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், லட்சுமணகுமார் பீகாரில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், சில நாட்களாக அப்பெண் இவருடன் தொலைபேசியில் பேசாத விரக்தியில் இருந்ததும், இதன் காரணமாக தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது