திருப்புவனம், மே 10: திருப்புவனம் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். பிளஸ் 2 தேர்வை 391 மாணவிகள் எழுதினர். இதில் 376 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். (தேர்ச்சி சதவிகிதம் 96.16). பள்ளியில் தமிழ்செல்வி 574, ஷோபிகா568, அபிநயா 566 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.
வணிகவியல் பாடத்தில் மூன்று மாணவிகள் 100, கணக்குபதிவியல் பாடத்தில் மூன்று மாணவிகள் 100 பெற்றுள்ளனர். கணினிஅறிவியல், கணினி பயன்பாடு, வேதியியல் ஆகிய பாடங்களிலும் மாணவிகள் சதமடித்துள்ளனர்.