பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை தேவன்நகர் பகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 மாணவி கடந்த 2021ஆகஸ்ட் 12ம்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீசில் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நடத்திய விசாரணையில், காணாமல் போன மாணவி ஈரோட்டில் மீட்டனர். ஆட்டோ டிரைவரான தஞ்சாவூர் மானோஜிப்பட்டி கன்னியம்மாள் நகரை சேர்ந்த பாண்டியன்(25) என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாண்டியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்….

Related posts

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்

இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஊர், ஊராக அழைத்துச் சென்று சித்ரவதை: ஜம்முவில் வாலிபர் கைது