Sunday, September 29, 2024
Home » பிளஸ் 1 தேர்வில் 93.27 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் 1 தேர்வில் 93.27 சதவீதம் தேர்ச்சி

by Ranjith

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வில் 6,548 மாணவர்கள், 7,393 மாணவிகள் என மொத்தம் 13,941 பேர் தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவுகளின் படி 5,869 மாணவர்கள், 7,134 மாணவிகள் என மொத்தம் 13,003 பேர் தேர்ச்சி பெற்று, மாவட்ட அளவில் மொத்தம் 93.27 % தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 161 பள்ளிகளில் 34 பள்ளி மாணவர்கள் 100 % தேர்ச்சி பெற்றனர். அதன்படி 71 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றது.

இதனை போன்று 36 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 பள்ளிகள், 54 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் 34 பள்ளி மாணவ, மாணவர்கள் 100 % தேர்ச்சி பெற்றனர். மேலும் இயற்பியலில் 6 பேர், வேதியியலில் 3 பேர், விலங்கியலில் 2 பேர், கம்யூட்டர் சயின்ஸில் 3 பேர், கம்யூட்டர் அப்ளிகேஷனில் 9 பேர், வணிகவியலில் 2 பேர், கணக்கு பதிவியலில் 10 பேர், வேளாண்மையில் 70 பேர், தனிக்கையியலில் 187 பேர், பிற பாடங்களில் 59 என 351 பேர் தனிப்பாடங்களில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

You may also like

Leave a Comment

3 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi