பிறந்து 12 நாளேயான பெண் குழந்தை சாவு

 

தர்மபுரி, மார்ச் 11: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சுபாசினி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 12 நாட்களுக்கு முன்பு, ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று, திடீரென அந்த பெண் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சங்கர் உடனடியாக குழந்தையை பேளாரள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். பின்னர், மேல்சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை