பாரீஸ்: பிரான்சில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை நிகோலஸ் சர்கோசி (66) அதிபராக இருந்தார். 2012ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரசாரத்துக்காக அவர் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் நிதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்தேர்தலில் அவர் தோற்றார். , சட்ட விரோத நிதி அளித்தது பற்றி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தீர்ப்பில், நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார். மேலும், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்தார். இந்த தண்டனை காலத்தை வீட்டு சிறையிலேயே கழிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார். …