பிரதமர் மோடி உதவ வேண்டும்: காஷ்மீரில் வசிக்கும் உக்ரைன் பெண் வேண்டுகோள்

புல்வாமா: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி உதவ வேண்டும் என்று காஷ்மீரில் வசிக்கும் உக்ரைன் பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்கு காஷ்மீரின் புல்வாமா அடுத்த டிரால் பகுதியைச் சேர்ந்த ஆசியா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஐந்து ஆண்டுகளுக்கு முன் காஷ்மீர்  தொழிலதிபரான பிலால் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு உள்ளனர். உண்மையில் ஆசியா உக்ரைனை சேர்ந்தவராவார். இவரது உண்மையான பெயர் அலிசா. பிலால் அகமதுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது பெயரை ஆசியா என்று மாற்றிக் கொண்டார். தற்போது தம்பதிகள் காஷ்மீரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் போர் குறித்து ஆசியா கூறுகையில், ‘உக்ரைனில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன. அங்கு வசிக்கும் எனது பெற்றோரின் நிலைமை குறித்து கவலையடைந்துள்ளேன். தொடர் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பலியாகியுள்ளன. உக்ரைனில் உள்ள எனது உறவினர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலையாக உள்ளது….

Related posts

ஹரியானா தேர்தல்; பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை!

சிறுவாணியில் அணை கட்ட அனுமதி; விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியது ஒன்றிய அரசு!

வச்சான் பாரு ஆப்பு.. இன்ஸ்டாகிராமில் 2025 ஜனவரி முதல் நோ ஃபில்டர் ஆப்ஷன்: மெட்டா அறிவிப்பு!!