திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அத்திமலைப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கரின் அதிகாரத்தை நீக்கி ஆட்சியர் உத்தரவிட்டார். ஊராட்சி செயலாளர் ரமேஷை பணியிடைநீக்கம் செய்தும் திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டிருக்கிறார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் பெற்ற புகாரில் இருவர் மீதும் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். …