பிச்சை எடுத்தாவது நாட்டு மக்களை காப்பாற்றுங்கள்: ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்: உயர்நீதிமன்றம் காட்டம் !

டெல்லி: பிச்சை எடுத்தாவது நாட்டு மக்களை காப்பாற்றுங்கள் என மத்திய அரசு மீது டெல்லி உயர்நீதிமன்றம் கடும் காட்டமான பதில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து, பொது மக்களை காப்பாற்றுவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டி வருவதாகவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்றில் மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் காட்டமான அறிவுறுத்தல் ஒன்று கூறியுள்ளது. பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள்., எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் காட்டமாக அறிவுறுத்தி உள்ளது….

Related posts

நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்; சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு: முதல்வர் பதவிக்கு ஆபத்து

கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா..? முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

பிரபல மலையாள சினிமா டைரக்டர் பாலச்சந்திர மேனன் மீது நடிகை பலாத்கார புகார்: குரூப் செக்சுக்கும் கட்டாயப்படுத்தினார்