பாளை டாஸ்மாக் கடையில் புகுந்து ஊழியர் மீது பீர்பாட்டிலால் தாக்குதல்

நெல்லை : நெல்லை அருகே தேவர்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (43). பாளை பெருமாள்புரம் உழவர் சந்தையில் ெசயல்படும் டாஸ்மாக் கடை ஊழியரான இவர், நேற்று வழக்கம் போல் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம்  விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், ஜெயக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரமடைந்த அவர், ஜெயக்குமாரின் தலையில் பீர்பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோடினார். இதில் காயமடைந்த ஜெயக்குமாரை அங்கிருந்தோர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பாளை பெருமாள்புரம் போலீசார், டாஸ்மாக் கடை மற்றும் அக்கம்பக்கத்திலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்….

Related posts

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் காலி பணியிடம் எத்தனை?.. ஐகோர்ட் கிளை