ஷில்லாங்: மேகாலயாவில் பாஜ மாநில துணை தலைவர் மராக். இவரது பண்ணை வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் பாலியல் தொழில் நடத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டது. பெண்கள் உட்பட 73 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் மராக் தலைமறைவானார். இந்த விவகாரத்தில் மராக்கை கைது செய்வதற்கு துராவில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மராக்கிற்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது….