பாலஸ்தீன தூதரகத்தில் இந்திய தூதர் மர்ம மரணம்

புதுடெல்லி: பாலஸ்தீனத்துக்கான இந்திய தூதர் முகுல் ஆர்யா. பாலஸ்தீன்தின் ராமல்லாவில் உள்ள தூதரக அலுவலகத்தில் அவர் நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆர்யா இறந்ததற்கான காரணங்களை இரு நாடுகளும் முழுமையாக தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்திய தூதரின் மறைவுக்கு ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்திய தூதர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் மிகவும் திறமை வாய்ந்த அதிகாரியாக இருந்தார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்….

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது