பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

கடலூர், மே 8: கடலூர் முதுநகர் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் கபிர் உசேன் மகன் அபுகலாம் (19). இவர் கடலூர் முதுநகர் அருகே உள்ள பூண்டியாங்குப்பத்தில் நெடுஞ்சாலை பாலம் அமைக்கும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பாலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை