பாரதிராஜாவுக்கு உயர் சிகிச்சை

சென்னை: திரைப்பட இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்சத்து குறைவு, நெஞ்சு சளி பிரச்னை இருந்ததால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் உயர் சிகிச்சைக்காக நேற்று தியாகராய நகர் மருத்துவமனையில் இருந்து அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பாரதிராஜாவை சந்தித்த பாடலாசிரியர் வைரமுத்து நிருபர்களிடம் கூறும்போது, ‘இயக்குனர் பாரதிராஜா நலமோடு இருக்கிறார். நல்ல நிலையில் இருக்கிறார். அச்சப்படுவதற்கு ஆதாரமில்லை, மருத்துவர்கள் நல்ல சிகிச்சையை வழங்கி வருகிறார்கள்’’என்றார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை