சென்னை: பாரதியின் நினைவை போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலா; திறம்பாட வந்த மறவன்; அறம்பாட வந்த அறிஞன்; படரும் சாதி படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாள் இன்று; தமிழுக்கு தொண்டு செய்த அப்பைந்தமிழ் தேர்ப்பாகனின் நினைவை போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….